Featured Posts
Recent Articles

தென்னிந்திய திரைப்படத்தில் தீபச்செல்வன் எழுதிய நம்பிக்கைப் பாடல் !

ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன் ´யாவும் வசப்படும்´ என்ற தென்னிந்திய திரைப்படத்திற்காக பாடல் ஒன்றை எழுதியுள்ளார். ‘முயன்றால் முடியும்…’ என்று தொடங்கும் இந்தப் பாடல் மனதில் நம்பிக்கையை ஊட்டுகின்ற பாடலாக வரவேற்பைப்பெற்றுள்ளது.
புதியவன் ராசய்யா ´யாவும் வசப்படும்´ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் டைட்டில் சோங்கை (எழுத்தோட்டப்பாடல்) தீபச்செல்வன் எழுதியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
கதைக்கு ஏற்ப எழுதப்பட்ட இந்தப் பாடல் பல இடங்களில் ஈழத்தை நினைவுபடுத்துகிறது. தீபச்செல்வன் திரைப்படத்தில் எழுதிய முதல் பாடலையே அட்டகாசமாக எழுதியுள்ளார்.
திரைப்படத்தில் விஜித், தில்பிகா, பாலா, ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஏஏ புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘யாவும் வசப்படும்’ திரைப்படத்திற்கு ஆர்.கே. சுந்தர் இசையமைத்துள்ளார்.
ஈழத்தின் கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட தீபச்செல்வன் கவிதை, கட்டுரை, சிறுகதை என இதுவரை 11 நூல்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இவர் தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறார்.
இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம் 2010ம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர்களுக்கான விருது வழங்களில் தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த கவிதைக்கான கணையாழி விருது இவருக்கு 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

Share and Enjoy:

0 கருத்துகள் for this post

Leave a reply

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Subscribe via RSS Feed subscribe to feeds
Sponsors
Template By SpicyTrickS.comSpicytricks.comspicytricks.com
Template By SpicyTrickS.comspicytricks.comSpicytricks.com
Popular Posts
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
Blog Archives
Recent Comments
Tag Cloud